பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழ்நாட்டில் 2023-24ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் அக்டோபர் 1ம் தேதியே தொடங்கும் என அரசு அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கொள்முதல் விலை போதுமானதல்ல. ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்த அளவு ஆதரவு விலையான சன்ன ரகத்திற்கு ரூ.2,203, சாதாரண ரகத்திற்கு ரூ.2,183 என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அத்துடன் சாதாரண நெல்லுக்கு ரூ.82, சன்னரக நெல்லுக்கு ரூ.107 வீதம் ஊக்கத்தொகை சேர்த்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265, சன்னரக நெல் குண்டால் ஒன்றுக்கு ரூ.2,310 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானதல்ல.
மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலையாக ரூ.2,203 மட்டுமே அறிவித்துள்ள நிலையில் மீதமுள்ள 797 ரூபாயை தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். அவ்வளவு தொகை வழங்க வாய்ப்பில்லை என்றால் குறைந்த அளவு குவிண்டாலுக்கு 500 ரூபாயாவது ஊக்கத் தொகை வழங்க அரசு முன்வர வேண்டும் என அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.