சென்னை

வேளச்சேரி கல்லூரி மாணவர்கள் மோதல்- 9 பேர் கைது

Published by
Aishwarya
Share

வேளச்சேரி கல்லூரி மாணவர்கள் மோதல்- 9 பேர் கைது

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Image

சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 9 பேரை கைது செய்தனர். மேலும் 12 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். குருநானக் கல்லூரியில் 3ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வரும் மாணவரை தாவரவியல் பிரிவு மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தில், 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து வேளச்சேரி குருநானக் கல்லூரி நிர்வாக நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரிக்குள் இருபிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் வெடி, நாட்டு வெடிகுண்டு ரகத்தைச் சார்ந்தது அல்ல பட்டாசு என சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Show comments
Published by
Aishwarya
Tags: Bomb Chennai College குருநானக் கல்லூரி சென்னை நாட்டு வெடிகுண்டு வேளச்சேரி