“சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான படம்”… அயோத்தியைப் புகழ்ந்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சசிகுமாரின் ‘அயோத்தி’ படத்தை பாராட்டியுள்ளார்.

தற்போது வெளியாகும் படங்களில் சிறந்த படங்களை பார்த்துவிட்டு உடனே பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘விடுதலை’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார்.

Ayothi

இந்நிலையில் தற்போது ‘அயோத்தி‘ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ‘அயோத்தி’ வெளியானது. மதங்களைத் தாண்டி மனிதம் போற்றி அனைவரது இதயங்களையும் வென்றது ‘அயோத்தி’. படத்தின் நடிகர் அனைவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர். குறிப்பாக கதாநாயகி. நீண்ட நாளுக்குப் பிறகு சசிகுமாருக்கு பேர் சொல்லும் படமாக அமைந்தது அயோத்தி.

தற்போது ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில்,

அயோத்தி

நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார்.

ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி, சசிகுமார் இருவரும் ‘பேட்ட’ படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement