புயல் எச்சரிக்கை: டிச.04- ஆம் தேதி திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 

Rain - மழை

புயல் எச்சரிக்கை காரணமாக, வரும் டிசம்பர் 04- ஆம் தேதி திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!’

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில், புயலாக மாறவுள்ளது. இதையடுத்து, கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வரும் டிசம்பர் 04- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

“புயலை எதிர்க்கொள்ள தமிழக அரசு தயார்”- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி!

ஏற்கனவே, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 04- ஆம் தேதி விடுமுறை அளித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement