மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
“இடைத்தரகர்கள் மூலம் என்னையே மிரட்டினர்”- சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேட்டி!
பெருநகர சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம். வெளியே பயணிக்க வேண்டியிருந்தால் பொது போக்குவரத்து (அல்லது) நம்பகமான வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். இடி, புயலின் போது, மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மின்கம்பம், கம்பிகள், உலோகப் பொருட்கள், மின்னலை ஈர்க்கக் கூடிய கட்டமைப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும். கீழே விழுந்து கிடைக்கும் மின்கம்பிகளைத் தொட வேண்டாம்; அதன் அருகில் செல்ல வேண்டாம். பொதுமக்கள் வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் ஓட்ட வேண்டும்; மேலும் பிரேக்குகளை சரி பார்க்க வேண்டும்.
‘ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!’
தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வாகனங்களை ஓட்ட வேண்டாம். சென்னையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளது.