Homeசெய்திகள்சினிமாகுடித்துவிட்டு வந்து தினமும் தாக்குவார்... ஷகிலா மீது வளர்ப்பு மகள் புகார்...

குடித்துவிட்டு வந்து தினமும் தாக்குவார்… ஷகிலா மீது வளர்ப்பு மகள் புகார்…

-

- Advertisement -
80-களில் பல விமர்சனங்களுக்கும், தடைகளுக்கும் ஆளாகியவர் நடிகை ஷகிலா. அதே ஷகிலா தான் இன்று ஷகிலா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இவர். தமிழில் நடிகையாக அறிமுகமான அவர், மாஞ்சா வேலு, பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி, அழகிய தமிழ் மகன், ஜெயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரங்களிலும், நடித்து உள்ளார்.

இதன் பிறகு அவர் நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அப்போது அவரும் புகழும் செய்த நகைச்சுவைகள் பெரிய அளவில் ஹிட் அடித்தன. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின. அந்நிகழ்ச்சிக்கு பிறுக அவர் ஷகிலா என அழைக்கப்பட்டார். நடிகை ஷகிலாவுக்கு ஷீத்தல் எனும் வளர்ப்பு மகள் உள்ளார். இருவரும் பல நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில், நடிகை ஷகிலாவிற்கும் அவரது வளர்ப்பு மகள் ஷீத்தாவின் குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஷீத்தாவும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து நடிகை ஷகிலாவை தாக்கியதாக தெரிந்தது. ஆனால், தற்போது நடிகை ஷகிலா தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த வளர்ப்பு மகள் ஷீத்தலை தாக்கியதாக, அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ