spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிம்பு படத்தில் இணையும் இரு பெரும் பாலிவுட் நட்சத்திரங்கள்

சிம்பு படத்தில் இணையும் இரு பெரும் பாலிவுட் நட்சத்திரங்கள்

-

- Advertisement -
சிம்பு நடிக்கும் 48-வது திரைப்படத்தில் இரு பெரும் பாலிவுட் நடிகைகள் இணைவதாக தகவல் வௌியாகி உள்ளது.

கோலிவுட்டின் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு. சுட்டியாக அறிமுகமான நாள் முதல், நாயகனாக வெளுத்து வாங்கும் இன்று வரை சிம்புவுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தந்தையின் படத்தில் குழந்தையாக நடித்து சினிமாவிக்கு அறிமுகமான சிம்பு, இன்று கோலிவுட்டி முக்கிய முகமாக மாறியிருக்கிறார். காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நடித்து அவர் நாயகனாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே மக்கள் மனதில் முத்திரை பதித்த சிம்பு அடுத்தடுத்து காதல், காமெடி, கமர்ஷியல், ஆக்‌ஷன் என பல பரிமாணங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

we-r-hiring
கடந்த சில ஆண்டுகளாக சிம்பு நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. தொடர்ந்து பல விமர்சனங்களுக்கும் ஆளாகினார் சிம்பு. ஈஸ்வரன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இத்திரைப்படம் சிம்பு நடிக்கும் 48-வது படமாகும்.

அண்மையில் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டு உள்ளது. இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்புவின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் இருவரும் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, தக் லைஃப் படத்திலும் சிம்பு நடித்து வருகிறார்.

MUST READ