Homeசெய்திகள்சினிமாஉழைப்பாளர்களுக்கும், அஜித்குமாருக்கும் எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து...

உழைப்பாளர்களுக்கும், அஜித்குமாருக்கும் எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து…

-

- Advertisement -
நடிகராகவும், இயக்குநராகவும் தமிழ்சினிமாவில் தடம் பதித்தவர் எஸ்.ஜே.சூர்யா. வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா, முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அறிமுக இயக்குநரின் படம் போல் இல்லாமல், முன்னணி இயக்குநருக்கு நிகராக படம் இயக்கி வெற்றி கண்டார். முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி திரைப்படம் இன்று வரை காதலர்கள் கொண்டாடும் வெற்றி திரைப்படம். இதைத் தொடர்ந்து இயக்கம் மட்டுமன்றி நடிப்பிலும் ஆர்வம் செலுத்த தொடங்கினார் எஸ்.ஜே.சூர்யா.

எஸ்.ஜே.சூர்யா தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுதவிர, விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் 2 படத்தில் நடிக்கிறார். மேலும், தனுஷ் நடிப்பில் உருவாகும் ராயன் திரைப்படத்திலும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில், மே 1 தினமான இன்று உழைப்பாளர் தினத்துக்கும், நடிகர் அஜித் பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்து எஸ்.ஜே.சூர்யா பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், மே 1 உழைப்பாளர் தின வாழ்த்துகள் மற்றும் இந்த உழைப்புக்கு வாழ்க்கை கொடுத்த சிறந்த உழைப்பாளி அஜித்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த ஆண்டு சிறப்பாக அமையட்டும். வாலி திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றன. படம் வெற்றிக்கு, அப்பா, அம்மா, அஜித் மற்றும் என் நண்பர்கள், ரசிகர்களுக்கு பல கோடி நன்றிகள் என எஸ்.ஜே.சூர்யா பதிவிட்டுள்ளார்.

MUST READ