விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், உலகளாவிய அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கில் ஸ்டார்லிங் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், தற்போது இந்தியாவிலும் ஸ்டார்லிங் இணைய சேவை விரைவில் அறிமுகமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மத்திய தொடர்புத் துறை, இந்த சேவையை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு விருப்பக் கடிதம் (Letter of Intent) வழங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஸ்டார்லிங் சேவையை கொண்டு வர, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, ஜியோ நிறுவனம், கிராமப்புற மற்றும் பின்தங்கியிருக்கும் பகுதிகளிலும் அதிவேக இணையத்தை கொண்டு செல்லும் நோக்கத்தில், ஸ்டார்லிங்கின் உபகரணங்களை வழங்கி, அவற்றை நிறுவும் பணியையும் மேற்கொள்ளவுள்ளது. இந்த ஒப்பந்தம், இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கியமான முயற்சியாக இரு நிறுவனங்களும் கூட்டாக தெரிவித்துள்ளன.