மத்திய அமைச்சர் குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ சுரேஷ் பாபு ஆகியோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமாரசாமிக்கு எதிரான சுரங்க வழக்கை விசாரிப்பதற்காக மூவரும் தன்னை மிரட்டியதாக குற்றம்சாட்டிய மூத்த அதிகாரியின் புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமாரசாமி அரசு ஊழியரை மிரட்டியதாகவும், பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும், கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) எம்.சந்திரசேகர் தனது புகாரில் கூறியுள்ளார்.
குமாரசாமி 2006 முதல் 2008 வரை கர்நாடக முதல்வராக இருந்தபோது, சட்டத்தை மீறி பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சாய் வெங்கடேஸ்வரா மினரல்ஸ் (எஸ்எஸ்விஎம்) நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக 550 ஏக்கர் சுரங்க குத்தகைக்கு அனுமதி அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக குமாரசாமிக்கு எதிரான விசாரணை நடத்தப்பட்டது.
சந்திரசேகரின்புகாரின்படி, ‘‘குமாரசாமி குற்றம் சாட்டப்பட்ட சுரங்க வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்தார். அவர்கள் ஊழல் குறித்த விசாரணையைத் தடுக்க முயன்றனர்.
மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரி அனுமதி கேட்டதையடுத்து, எச்.டி.குமாரசாமி முதல்வருக்கு எதிராக பொய்யான புகார்களை கூறியதாக அவர் குற்றம் சாட்டினார்.
“எஸ்ஐடி, விசாரணை அறிக்கையைத் தயாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர் (குமாரசாமி) மீது வழக்குத் தொடர கணிசமான ஆதாரங்கள் மற்றும் பொருட்களைக் கண்டறிந்த பின்னர், குற்றம் சாட்டப்பட்ட எச்டி குமாரசாமிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கோரி 21/11/2023 அன்று கர்நாடக ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
பெங்களூரு சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் நவம்பர் 4 திங்கள்கிழமை சந்திரசேகர் அளித்த புகாரில், ‘‘குமாரசாமி மற்றும் அவரது மகன் நிகில் தன்னை மிரட்டுவதற்காக தன் மீது குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். கர்நாடகா கேடர் அதிகாரியாகத் தொடர நான் போலி மருத்துவப் பதிவேடுகளைப் பெற்றுள்ளதாக பொய் கூறுகின்றனர். குமாரசாமி, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக மிரட்டல் விடுக்கிறார்’’ என ஏடிஜிபி சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
சந்திரசேகர், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் உள்ள சட்டவிரோத சுரங்க வழக்கு விசாரணையை நடத்தி வருகிறார்.
மத்திய அமைச்சர் குமாரசாமி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ‘‘இது கேலிக்குரியது. தீங்கிழைக்கக்கூடியது. புகாரைப் படித்த பிறகு, அது முற்றிலும் அபத்தமானது என்பதை உணர்ந்தேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.