நந்தினிக்கு வைர நெக்லசை பரிசளித்த விஜய்
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார் நடிகர் விஜய்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 08) காலை 10.00 மணிக்கு வெளியானது. சுமார் 8.17 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய நிலையில், மொத்தம் 94.03% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 91.45% பேரும், மாணவிகள் 96.38% பேரும் அடங்குவர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி, அனைத்து பாடங்களிலும் 100- க்கு 100 என்ற அடிப்படையில் 600 மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்து, மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். அந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும், வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் விஜய், அவருக்கு சான்றிதழையையும், ஊக்கத்தொகையையும் வழங்கினார். பின்பு வைர நெக்லசை நந்தினிக்கு விஜய் பரிசளித்தார். அதனை மேடையிலேயே அவரது தாய், நந்தினிக்கு போட்டுவிட்டு அழகு பார்த்தார்.