- Advertisement -
பரியேறும் பெருமாள் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வௌியாகி இருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இத்திரைப்படத்தில் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக பெரும் வரவேற்பைப் பெற்றது. மாரி செல்வராஜ் தனது முதல் படத்திலே தான் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகப்போவதை உறுதி செய்துவிட்டார். படத்திற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.
இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன், மாமன்னன் அடுத்து வாழை உள்பட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். முன்னணி நடிகர்களையும் இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். இந்நிலையில் பரியேறும் பெருமாள் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
https://x.com/i/status/1795099451276619800