spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஒரே நேரத்தில் 5 படங்களில் நடிக்கும் ராஷ்மிகா... இடைவெளியில் இத்தாலியில் கொண்டாட்டம்...

ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிக்கும் ராஷ்மிகா… இடைவெளியில் இத்தாலியில் கொண்டாட்டம்…

-

- Advertisement -
ஒரே நேரத்தில் சுமார் 5 திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தற்போது கிடைத்துள்ள விடுமுறையை இத்தாலியில் கொண்டாடித் தீர்த்தார். 
தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பாகவே, அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் அவர் பிரபலம் என்றே சொல்லலாம். சுல்தான்படத்திற்கு பிறகு, விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமன்றி இந்தியில் அனிமல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ராஷ்மிகா, பாலிவுட்டிலும் உச்ச நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.

தற்போது அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அத்துடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் ரெயின்போ படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும், பிரபல பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கும் தி கேர்ள்பிரண்ட் படத்திலும் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகிறது. இது தவிர தனுஸூக்கு ஜோடியாக குபேரா படத்தில் நடித்துவருகிறார்.

மேலும், பாலிவுட்டில் சல்மான் கானுக்கு ஜோடியாக சிக்கந்தர் திரைப்படத்திலும், விக்கி கௌசலுடன் புதிய படத்திலும் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 5 படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் கிடைத்த இடைவெளியில் நடிகை ராஷ்மிகா மந்தனா இத்தாலி பறந்துள்ளார். அங்கு விடுமுறையை கோலாகலமாக கொண்டாடித் தீர்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ