spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅமெரிக்காவுக்கு மறக்க முடியாத பதிலடி! ஈரான் எச்சரிக்கை! இஸ்ரேல் நாசம்!

அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பதிலடி! ஈரான் எச்சரிக்கை! இஸ்ரேல் நாசம்!

-

- Advertisement -

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்கியதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இதன் காரணமாக மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி விட்டதாகவும், மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஈரான் அணுசக்தி நிலையங்களின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் – ஈரான் போரின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி அளித்துள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களின் மீது நள்ளிரவில் அமெரிக்கா அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. பி-2 என்று அழைக்கப்படுகிற பங்கர் பஸ்டர் குண்டுடை ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த அணு சக்தி நிலையத்தை ஈரானுக்கு கட்டிக்கொடுத்தது ரஷ்யாவாகும். அங்கு யுரேனியத்தை செறிவூட்டுகிற பணி நடைபெற்று வந்தது. அங்கு ஏராளமான ரஷ்யர்களும் பணிபுரிந்து வந்தனர். அதனால்தான் இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களின் மீது அமெரிக்கா துல்லியமாக தாக்குதல் நடத்தியுள்ளபோதும், ஈரான் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் உள்ள முக்கிய கட்டிடங்களை 3000 பவுண்ட் எடையிலான புதிய வகை ஏவுகணைகளை வீசி ஈரான் நாசக்காடாக மாற்றிவிட்டது. அமெரிக்கா, ஈரானின் 4 இடங்களில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் 40 இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால், போரில் தாங்களும் இறங்குவோம் என்று ரஷ்யா ஏற்கன தெரிவித்து இருந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஈரானுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இஸ்ரேலை தாக்கினால், அமெரிக்கா கதறும். எனவே இஸ்ரேலிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தலாமா? அந்நாட்டின் துறைமுகங்கள் மீது தாக்குதல் தொடுக்கலாமா? என ஆலோசித்து வருகிறது. ஈரான் முன்னர் ஃபட்டா 01, செஜில் போன்ற ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தற்போது புதிய வகை ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது. ஈரானின் அதிபயங்கர தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் ஈரானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி, டிரம்ப் அமெரிக்க மக்களை அழிவை நோக்கி தள்ளிவிட்டார் என்றும், நிச்சயமாக பாடம் கற்பிக்காமல் விடமாட்டோம் என்றும் சூளுரைத்துள்ளார். இந்த போரில் எந்த தரப்புக்கு சேதம் ஏற்படுகிறதோ இல்லையோ. இஸ்ரேல் மிகப்பெரிய அழிவை சந்திக்க உள்ளது.

எப்படி அப்பாவி காசா மக்களை கொன்று குவித்தார்களோ, அதேபோன்று இஸ்ரேல் மக்கள் கொந்தளித்துள்ளனர். இஸ்ரேல் மக்கள் இது போன்ற மிகப் பெரிய அளவிலான தாக்குதலை எதிர்கொண்டதே கிடையாது. இந்த விவகாரத்தில் தற்போது அமெரிக்கா தலையிட்டுள்ளதால், இனி டிரம்ப் அதிர்ச்சி அடையக்கூடிய நிகழ்வுகள் கூட நிகழலாம். ரஷ்யா மற்றும் சீனா எடுக்குப்போகிற முடிவுதான், இந்த போர் அடுத்தக்கட்டமாக எங்கு செல்லும் என்பதை காட்டும். அதுவரை ஈரான் அமெரிக்கா மீது தாக்குதல்களை நடத்தவே செய்யும்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பலத்தை காண்பித்தால் தான் அமைதி பிறக்கும் என்று சொல்கிறார். நிச்சயமாக இந்த போர்  சாதாரணமாக முடியாது. அமெரிக்கா தாக்கியதால், இது அடுத்தக்கட்டத்தை நோக்கி கட்டாயம் நகரும். இஸ்ரேலை பாதுகாக்க செங்கடலில் அமெரிக்காவின் 3 போர்க்கப்பல்கள் நின்று கொண்டுள்ளன. இந்த சூழலில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தாக்குதலை தொடங்கியுள்ளனர். ஈரானில் யுரேனியம் செறிவூட்டும் மையம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறபோது, அதனால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக அங்குள்ள மக்கள் இறக்கும் அபாயம் உள்ளது.

இஸ்ரேல் – ஈரான் போரில் நிச்சயமாக ரஷ்யா இறங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ரஷ்ய அதிபர் புதின், போர் தொடங்கி 8 நாட்கள் வரை நடைபெற்றபோதும் தலையிடவில்லை. 9வது நாளில் இந்த போரில் அமெரிக்கா தலையிடக்கூடாது. அப்படி தலையிட்டால் ரஷ்யாவின் கூட்டாளியான ஈரானுக்கு ஆதரவாக நாங்களும் உதவி செய்ய வேண்டி வரும் என்று சொன்னார். ஈரான், தங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும் இஸ்ரேலை தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் அமெரிக்காவின் விமான தளமாக செயல்படுவது, ஆயுத பரிசோதனை நிலையமாக செயல்படுவது, அவர்களுக்கு கூலியாக செயல்பட்டு போர்களை நடத்துவது எல்லாம் இஸ்ரேல்தான். அதனால் இஸ்ரேலை குறிவைத்து தாக்குகிறார்கள்.

Russia putin

இந்த போர் எப்படி போய் முடியும் என்பதை கணிக்க முடியாத சூழல் உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருப்பதன் மூலம் மூன்றாம் உலகப் போர் தொடங்குவதற்கான அத்தனை வாய்ப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ரஷ்யா எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்தே, சீனாவும் முடிவு செய்யும். ஏற்கனவே பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளின் மீது ரஷ்யா கடுமையான கோபத்தில் இருக்கிறது. இன்றைய சூழல் ரஷ்யா போரில் இறங்கினால், அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தும். இது இரண்டாம் உலகப் போர் போல வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டு இருக்காது. குறுகிய காலத்திற்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரம் குறித்து ரஷ்யா தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதிகபட்சம் 48 மணி நேரத்திற்குள்ளாக தங்களின் முடிவை அறிவிப்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ