இதுவரை சிறிய நாடுகள் மற்றும் ஆயுதக்குழுக்களுடன் மட்டுமே போரிட்டு வந்த இஸ்ரேல் முதன்முறையாக ஒரு முழுமையான நாட்டு உடன் போரிட்டு உள்ளதாகவும், அந்த நாடு ஈரான் என்றும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோல் – ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதன் பின்னணி குறித்து அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் 2 நாட்கள் விட்டிருந்தால் ஈரான், இஸ்ரேலுக்கு முடிவு கட்டியிருக்கும். இந்த சூழலில் வேறு வழியின்றி அமெரிக்க தலையிட்டு, மத்தியஸ்தம் செய்வது போன்று ஈரானிடம் கெஞ்சி போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்கிறார் டிரம்ப். போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் ஈரான் தனது பலத்தை நிரூபித்து காண்பித்துள்ளது. இஸ்ரேலின் வரலாற்றில் 1947 முதல் 1948 இஸ்ரேல் – அரபு யுத்தம், 1956 சூயஸ் விகார போர், 1967 ஆறு நாள் போர், 1973ல் நடைபெற்ற டாம் கூப்பர் போர், இறுதியாக தற்போது நடைபெற்ற போர் வரை எடுத்துக்கொண்டால், இஸ்ரேல் இதுவரை சிறிய நாடுகளின் மீதுதான் தாக்குதல் நடத்தியுள்ளது. தற்போது தான் முதன் முறையாக ஒரு நாடு உடன் போரிட்டு உள்ளது. அந்த நாடு ஈரான். 2000 கி.மீ தொலைவில் இருந்தாலும், தன்னால் இஸ்ரேலை சர்வநாசம் செய்ய முடியும் என்று ஈரான் நிரூபித்துள்ளது. இஸ்ரேல் பயந்துபோய்தான், பி-2 பாம்பர் அனுப்பி, அணுசக்தி நிலையங்களை தாக்கினர். அதற்கு பதிலடியாக ஜிசிசி நாடுகள் மற்றும் கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. அப்படி தாக்கிய உடனே போர் நிறுத்தம் வந்துள்ளது.
ஈரான் இதுவரை நாட்டாமை செய்து கொண்டிருந்த இஸ்ரேலை தங்களால் அழித்து ஒழிக்க முடியும் என்று நிரூபித்துள்ளது. அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்த நாடு ஈரான். ஆனால் இஸ்ரேல் அந்த ஒப்பந்தத்தில் யையெழுத்து போடவில்லை. அணு குண்டு வைத்திருக்கும் நாடு இஸ்ரேல். அணு குண்டு இல்லாத நாடு ஈரான். இந்நிலையில், ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை நிறைவு செய்துவிட்டது. அது அணு ஆயுதத்தை தயாரித்துவிட்டது என்று சொல்லி தற்போது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. அப்படி அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும், பர்டோ, நட்டான்ஸ், இஸ்பஹான் ஆகிய 3 அணு சக்தி நிலையங்களிலும் உங்களால் ஒன்றும் செய்துவிட முடியாது என்று ஈரான் காட்டிவிட்டது. அடுத்தபடியாக அமெரிக்கா உடன் கைகோர்த்து அந்நாட்டு ராணுவ தளங்களை அமைத்திருந்த ஜிசிசி நாடுகள், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் மீதும் தாக்குதல் நடத்த முடியும் என்று நிரூபித்துவிட்டது. அடுத்த படியாக உலகின் 20 சதவீத எரிபொருள் வர்த்தகத்தை கையாளுகிற ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டால் உலகம் முழுவதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதற்கு முன்னதாக இஸ்ரேல் எதற்காவது ஒப்புக்கொண்டிருக்கிறதா? டெல்அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலின் அனைத்து நகரங்களையும் தாக்கி விட்டனர்.
ஒட்டுமொத்த காசா முனை பகுதியையும் அழித்து 55 ஆயிரம் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்றது. 16 ஆயிரம் குழந்தைகளை கொன்று, மருத்துமனைகளை தாக்கி அழித்தது இஸ்ரேல். அதே பயத்தை இஸ்ரேலுக்கு ஈரான் காண்பித்துவிட்டது. இஸ்ரேல் செய்ததற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு விட்டது. இஸ்ரேல் மக்களோ, பாலஸ்தீன மக்களோ போரை விரும்புவது கிடையாது. நெதன்யாகு போன்ற இஸ்ரேலிய தலைவர்கள், தங்களின் அதிகாரத்தை நிலை நிறுத்த, அமெரிக்கா மீது யூதர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கினை உலகிற்கு பறைசாற்றுவது தான் அவர்கள் நோக்கம். பாலஸ்தீனத்தை பிடித்துவிட்டோம் என்று உலகிற்கு அறிவிக்கவும், தங்களின் அதிகார வெறிக்கு மக்களை பலியாக்குவதை இரு நாட்டு மக்களும் விரும்பவில்லை. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது சட்டவிரோதமானது என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அறிவித்தனர். அமெரிக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1947ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின் அடிப்படையில் 56 சதவீதம் இஸ்ரேலுக்கும், எஞ்சிய 44 சதவீத நிலப்பகுதி பாலஸ்தீனத்திற்கும் வழங்க வேண்டும். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த இடங்களில் இருந்து வெளியேற வேண்டும். இனிமேல் ஆக்கிரமிப்பில் ஈடுபட மாட்டோம் என்று இஸ்ரேல் என்றைக்கு உறுதி அளிக்கிறதோ, அன்றைக்கு தான் அந்த பிராந்தியத்தில் அமைதி திரும்பும். தற்போது அறிவித்துள்ள போர் நிறுத்தம் தற்காலிகமானதுதான். உண்மையிலேயே டிரம்ப் அமைதியை விரும்புகிறார் என்றால்? ஐ.நா. அமைதிப்படையை அனுப்பி, 1947 ஒப்பந்தப்படி பாலஸ்தீனத்திற்கு உரிய பகுதிகளை பிரித்துக்கொடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை தருவேன் என்று டிரம்ப் சொன்னால் அதுதான் உண்மையான அமைதியை ஏற்படுத்துவது ஆகும். ஈரானுக்கு ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவு இருக்கிறது என்பதால்தான், ஈரானின் அணு சக்தி நிலையங்களை மட்டும் தாக்கினார்கள். நெதன்யாகு, டிரம்பின் காலில் விழுந்ததால் தான் அவர் பி-2 பாம்பரை அணுப்பி தாக்கினார். அமெரிக்க மக்களிடையே தன்னுடைய செல்வாக்கு சரிந்ததால், வேறு வழியின்றி ஈரானுடன் போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளார்.