தென்னிந்தியதிரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அர்ஜுன் ஸ்ரீராம் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பிரேம பரஹா எனும் திரைப்படத்தை தயாரித்து, எழுதி, இயக்கியிருந்தார்.
தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு அர்ஜுனே கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் கன்னட நடிகர் உபேந்திராவின் சகோதரரின் மகன் நிரஞ்சன் கதாநாயகனாக நடிக்கிறார். இது நிரஞ்சனின் அறிமுக படமாகும். மேலும் இதில் கதாநாயகியாக அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார்.
இவர்களுடன் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த படம் சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.