Homeசெய்திகள்சினிமாஇவ்ளோ மோசமான நிகழ்ச்சிய பாத்ததே இல்ல... ஏஆர் ரகுமான்& கோ-வை வறுத்தெடுக்கும் இசை விரும்பிகள்!

இவ்ளோ மோசமான நிகழ்ச்சிய பாத்ததே இல்ல… ஏஆர் ரகுமான்& கோ-வை வறுத்தெடுக்கும் இசை விரும்பிகள்!

-

- Advertisement -

சமீபத்தில் நடந்த ஏஆர் ரகுமான் இசைக்கச்சேரி குறித்து பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

தற்போது சமீப காலமாக திசை நிகழ்ச்சிகள் நடத்துவது அதிகமாகி வருகிறது. பெரிய இசையமைப்பாளர்கள் முதல் நான்கே படங்களுக்கு இசையமைத்த சிறிய இசையமைப்பாளர்கள் வரை இசை நிகழ்ச்சிகளை நடத்தி காசு பார்த்து வருகின்றனர்.

அதிலும் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டு பாடல்களை பாடகர்களை ஒரு வரி கூட பாட விடாமல் தாங்களே முழு பாட்டையும் பாடி வைப் ஆகி வருகின்றனர். இந்த இசை நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்பவர் நம்ம இசைப்புயல் ஏஆர் ரகுமான்.

அவருடைய இசைக்கச்சேரி நடைபெறுகிறது என்றாலே அடுத்த நொடியே ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் உடனே விட்டு தீர்ந்துவிடும். இந்நிலையில் சமீப காலமாக ஏஆர் ரகுமான் நடத்தி வரும் இசை நிகழ்ச்சிகளில் சரியாக ஒருங்கிணைக்கபடாததாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

நேற்று சென்னையில் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த போது நிகழ்ச்சியை நடத்தியவர்கள் கொள்ளளவுக்கு மீறி அதிக டிக்கெட்டுகளை விற்றுத் தள்ளியுள்ளனர்.

இதனால் பலர் நிற்பதற்கு இடமெல்லாம் போய் உள்ளது. மேலும் அந்த ரோட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே செல்ல வழி இல்லாமல் ரோட்டிலே காத்திருந்ததால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு பயங்கர பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டிக்கெட் எடுத்தவர்கள் ஒரு பக்கம் தங்களது பணம் போய்விட்டதாக குமுற, மறுபக்கம் பொதுமக்கள் தாங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளதாக வேதனையை தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு மோசமாக நிகழ்ச்சி நடத்தியதற்காக ஏ ஆர் ரகுமான் மற்றும் அமைப்பாளர்கள் தங்களது ரசிகர்களிடம் மன்னிப்பு கூற வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வைப் ஆக வேண்டும் என்று விரும்பி போன இசை விரும்பிகளுக்கு கடைசி ஏமாற்றம் மிஞ்சி இருக்கிறது.

MUST READ