spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகேன்ஸ் திரைப்பட விழாவில் ஜொலித்த நாயகிகள்

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜொலித்த நாயகிகள்

-

- Advertisement -
கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற இந்திய மற்றும் தென் கொரிய நடிகைகள் பலரின் கவனத்தை ஈர்த்தனர்.

பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கமாகும். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில், உலகம் முழுவதும் திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்பது வழக்கமாகும். இந்த விழாவானது 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி உள்ளது.

we-r-hiring
இதையொட்டி, கேன்ஸ் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தாண்டு 77 வது ‘கேன்ஸ் திரைப்பட விழா 2024 இன்று 14-ம் தேதி முதல் வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த விழாவில், சுமார் 140 நாடுகளில் இருந்து திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் திரையிட ஒரு தமிழ் திரைப்படமும் தேர்வாகி உள்ளது.

இந்தியாவில் இருந்து பிரபல நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கியாரா அத்வானி, சோபிதா துலிபாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். கையில் கட்டுடன் பங்கேற்ற ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
அதேபோல, பாலிவுட் நடிகை கியாரா அத்வாணியும் இரவு நேர விருந்தில் இந்தியா சார்பில் பங்கேற்றார். மேலும், இந்நிகழ்ச்சியில் தென் கொரிய நடிகைகளும் பங்கேற்று ஜொலித்தனர்.

MUST READ