ராமின் ஏழு கடல் ஏழு மலை… மற்றொரு சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு…
- Advertisement -
தமிழ் திரையுலகில் ராமின் திரைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராம், இதைத் தொடர்ந்து, தங்க மீன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். தரமணி, பேரன்பு ஆகியவை ராம் இயக்கிய திரைப்படங்கள். இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அடுத்ததாக ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. இதில் பிரபல மலையாள நடிகர் நிவின்பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ராம் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றன. கடந்த ஆண்டு இறுதியில் படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகின. இப்படத்தின் கதாபாத்திர அறிமுக புகைப்படங்கள் வெளியாகின. அடுத்து, படத்தின் டீசர் வெளியானது.
இந்நிலையில், ஏழு மலை ஏழு கடல் திரைப்படம் ரோமானியாவில் நடைபெற உள்ள, ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, ரோட்டர்டாம் உள்பட பல சர்வதேச விழாக்களில் இத்திரைப்படம் தேர்வானது குறிப்பிடத்தக்கது. ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.