நடிகர் கமல்ஹாசன் மக்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் தற்போது தக் லைஃப் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை மணிரத்னம் இயக்க கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் திரிஷா ,அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படமானது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை (ஜூன் 5) உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஆனால் கமல்ஹாசனுக்கு, ஒட்டுமொத்த தமிழகமும் ஆதரவு தெரிவித்தது. அதே சமயம் கர்நாடகாவில் இப்படம் நாளை வெளியாகாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தக் லைஃப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், “எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. மேடையில் உயிரே, உறவே, தமிழே என்று பேசுவதன் மூலம் அர்த்தத்தையும் இப்போது உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.