Homeசெய்திகள்சினிமாமலையாள நடிகையை அடித்த பாலா... படத்தை விட்டு விலகிய சம்பவம்...

மலையாள நடிகையை அடித்த பாலா… படத்தை விட்டு விலகிய சம்பவம்…

-

பிரபல மலையாள நடிகையை இயக்குநர் பாலா அடித்ததைத் தொடர்ந்து, அவர் படத்திலிருந்தே விலகிச் சென்றார்.

தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் முற்றிலும் மாறுபட்ட இயக்குநர் பாலா. இவர் நந்தா, சேது, பரதேசி உள்பட பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வணங்கான். இப்படத்தில் முன்னதாக சூர்யா நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவருக்கும் பாலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு படத்திலிருந்து அவர் விலகியதாக கூறப்பட்டது. சூர்யா விலகியதைத் தொடர்ந்து படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த க்ரித்தி ஷெட்டியும் விலகிச் சென்றார்.

இதையடுத்து, சூர்யாவுக்கு மாற்றாக அருண் விஜய்யும், க்ரித்தி ஷெட்டிக்கு மாற்றாக ரோஷினி பிரகாஷூம் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குமரியில் தொடங்கி, பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடத்து திருவண்ணாமலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.இப்படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கின்றனர். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தில் முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூவை இயக்குநர் பாலா அடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு காட்சிக்கு அவர் 3 முறை டேக் வாங்கியதாகவும், இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த பாலா மமிதாவை தோள்பட்டையில் அடித்தாராம். இதனால், சூர்யா, கிருத்தி ஷெட்டியைத் தொடர்ந்து நடிகை மமிதாவும் வணங்கான் படத்திலிருந்து விலகியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

MUST READ