Homeசெய்திகள்சினிமாநெல்சன் தயாரிக்கும் முதல் திரைப்படம்... வெளியானது அதிரடி அறிவிப்பு...

நெல்சன் தயாரிக்கும் முதல் திரைப்படம்… வெளியானது அதிரடி அறிவிப்பு…

-

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கோலிவுட் திரையுலகில் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே முத்திரை பதித்து முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் நெல்சன் திலீப்குமார். அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிியாகிய டாக்டர் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. டாக்டர் படத்திற்கு கிடைத்த வெற்றி விஜய் படத்தை இயக்க வித்திட்டது. அதன்படி, விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படதக்தை தயாரித்தது. இத்திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.

இறுதியாக நெல்சன் இயக்கத்தில் வௌியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினிகாந்த், வசந்த் ரவி, தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கும் அனிருத் இசை அமைத்திருந்தார். சுமார் 600 கோடி வசூலித்தது ஜெயிலர் திரைப்படம். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், இயக்குநர் நெல்சன் அண்மையில் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார். பிலமெண்ட் பிக்சர்ஸ் என இந்நிறுவனத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். படத்திற்கு ப்லெடி பெக்கர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிவபாலன் முத்துக்குமார் இத்திரைப்படத்தை இயக்குகிறார். ஜென் மார்ட்டின் படத்திற்கு இசை அமைக்கிறார். படத்தின் புரமோ வீடியோவையும் படக்குழு வெளியி்ட்டுள்ளது.

MUST READ