Homeசெய்திகள்சினிமாபேமிலி ஸ்டார் படம் தோல்வி... அடுத்து பிரம்மாண்ட இயக்குநர் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்... பேமிலி ஸ்டார் படம் தோல்வி… அடுத்து பிரம்மாண்ட இயக்குநர் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்…
- Advertisement -

இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை மிருணாள் தாகூர்.. இதைத் தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்து திரைக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பாலிவுட்டில் கமிட்டாகி நடித்து வந்தார். சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகமானவர் மிருணாள் தாகூர். துல்கர் சல்மான் மற்றும் மிருனாள் தாகூர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்‘ திரைப்படம் பான் இந்தியா அளவில் மெஹா ஹிட் ஆனது.

நடிகை மிருனாள் தாகூர் சீதா மகாலட்சுமியாகவும் இளவரசி நூர்ஜஹான் ஆகவும் ஒரே நேரத்தில் வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதை வென்றார். இதைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் ஹாய் நான்னா படத்தில் நானிக்குஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகிநல்ல வரவேற்பை பெற்றது.

அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பேமிலி ஸ்டார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இத்திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இதனால், பாலிவுட் பக்கம் திரும்பிய மிருணாள் தாகூர், பிரம்மாண்ட இயக்குநருடன் கூட்டணி அமைத்திருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் சித்தாந்த் சதுர்வேதி நாயகனாக நடிக்கிறார். அதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.