Homeசெய்திகள்சினிமாமீண்டும் சினிமா பக்கம் திரும்பும் டாப் தயாரிப்பாளர் மனைவி... விதவிதமான புகைப்படங்களில் அசத்தல்... மீண்டும் சினிமா பக்கம் திரும்பும் டாப் தயாரிப்பாளர் மனைவி… விதவிதமான புகைப்படங்களில் அசத்தல்…
- Advertisement -

இன்று இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக உருவெடுத்துள்ளவர் இயக்குநர் அட்லீ. இவர் பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். ராஜா ராணிபடத்தின் மூலம் அவர் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை அடுத்து, முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இதைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து பல படங்களை இயக்கி அதன் மூலம் வெற்றியும் கண்டார்.

இயக்குநர் அட்லீயின் காதல் மனைவியும், நடிகையுமானவர் பிரியா அட்லீ. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பாக நடிகை பிரியா, பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். சிங்கம், நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர குறும்படங்களிலும் அவர் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகிய பிரியா தற்போது பட தயாரிப்பில் குதித்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், நடிகை பிரியா அட்லீ அண்மைக் காலமாக அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் பிரியா அட்லீ தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. மேலும் அவர் சினிமா பக்கம் திரும்ப உள்ளதாகவும், கதைகள் கேட்பதில் ஆர்வம் செலுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.