நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி மறைப்பதற்கு ஏதுமில்லை என்று எழுதி முதுகை காட்டியது பல்வேறு விவாதங்களை எழுப்பிய நிலையில் அதற்கான அர்த்தம் தற்போது புரிய வந்துள்ளது. அபுதாபியில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இதுதான் விசயம் என்று கண்பார்ம் செய்துள்ளார்.
காதல்.. திருமணம்… விவாகரத்து என்று கடந்த சில ஆண்டு காலமாகவே மீடியா வெளிச்சத்தில் இருந்து வருகிறார் சமந்தா. அவரை சுற்றி பல சர்ச்சைகளும் உருவாகி வருகின்றன.
கடந்த 2010ஆம் ஆண்டு ‘ஏ மாயா சேசாவே’ படப்பிடிப்பின் போது சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே உருவான காதல், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தற்போது, நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலை மணந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.
இதனிடையே நடிகை சமந்தா வெப் சீரிஸ் இயக்கிய இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் டேட்டிங் செய்வதாக கிசு கிசு பரவி வரும் நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில் YMC டாட்டூ இல்லாததால், அதை அவர் நிரந்தரமாக நீக்கிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த ‘ஏ மாயா சேசாவே’ (YMC) திரைப்படத்தின் நினைவாக இந்த டாட்டூவை அவர் குத்தியிருந்தார். இந்த நிலையில்தான் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் மெரூன் நிற முதுகு இல்லாத உடையணிந்து “மறைக்க எதுவுமில்லை” என்று ஸ்க்ரீனில் எழுதினார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இது குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். “சமந்தா தனது YMC டாட்டூவை அகற்றிவிட்டார்” என்று ஒருவர் கூற, மற்றொருவர் “விளம்பரப் படப்பிடிப்பிற்காக மேக்கப்பால் மறைத்திருக்கலாம்” என்று கருத்து தெரிவித்தார்.
அதற்கான காரணம் என்னவென்று இப்போது பலருக்கும் புரிந்து விட்டது. விடுமுறையை கழிப்பதற்காக அபுதாபிக்கு சென்றுள்ள சமந்தா சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தனிமையில் இனிமை காணும் புகைப்படங்கள் அதிகம் இருந்தாலும் ஒரு சில புகைப்படங்களில் சமந்தா உடன் இருப்பவரை பார்த்து அவரது காதலர் ராஜ் நிடிமோருவும் சென்றிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் நெட்டிசன்கள்.
ஏற்கனவே திருமணமான ராஜ் நிடிமோருவுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் தனது கணவரை சமந்தா பறித்து விட்டதாக மறைமுகமாக போஸ்ட் போட்டு வந்தார் ராஜ் நிடிமோருவின் மனைவி. கடந்த வாரம் தனது கணவரை சமந்தா அபகரித்து விட்டார், எனது வாழ்வில் வந்த சனியே அவர் தான் என்பது போல ராஜ் நிடிமோருவின் மனைவி சமூக வலைதளப் பதிவை வெளியிட்டு இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே மறைமுக மோதல் இருப்பது வெட்ட வெளிச்சமானது.
இந்த நிலையில் சமீபத்தில் துபாய் சென்ற புகைப்படங்களை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படமும், சன் கிளாஸ் அணிந்தபடி இருந்த ஒரு புகைப்படமும் இருந்தது. சமந்தாவுக்கு அருகில் துப்பாக்கியோடு இருப்பது ராஜ் நிடிமோரு தான் என்கின்றனர் ரசிகர்கள்.
அதேபோல சமந்தா அணிந்துள்ள சன் கிளாஸில் தெரியும் உருவம் ராஜ் நிடிமோரு தான் என்கின்றனர். தனது சன் கிளாஸில் ராஜ் நிடிமோருவின் உருவம் தெரிய வேண்டும் என்பதற்காகவே சமந்தா அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தன்னை திட்டிய ராஜ் நிடிமோதுவின் மனைவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் சமந்தா தற்போது அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கின்றனர்.. “இனி மறைப்பதற்கு ஏதுமில்லை என்று இதைத்தான் சொன்னாரோ சமந்தா?.. எனவும் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.