விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பிச்சைக்காரன் 2 படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை வாரி குவித்தது. இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி, பாலாஜி குமார் இயக்கத்தில் கொலை எனும் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து ராதிகா, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, முரளி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்து ட்ரெய்லரும் வெளியாகி இருந்தது. மேலும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இதற்கிடையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பல படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் விஜய் ஆண்டனி ‘வள்ளி மயில்‘ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் இவருடன் இணைந்து பாரதிராஜா, சத்தியராஜ், பிரியா அப்துல்லா, தம்பி ராமையா உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தாய் சரவணன் படத்தை தயாரிக்க டி இமான் இசை அமைக்கிறார். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படம் புதுமையான த்ரில்லர் கதைகளத்தில் உருவாகி வருகிறது. 1980 ஆம் ஆண்டு காலகட்டத்திலான நாடகக் கலையை மையமாக வைத்து தயாராகி வருகிறது.
அதனால் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு திண்டுக்கல், மதுரை, கொடைக்கானல் பழனி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.