Homeசெய்திகள்சினிமாவிஜயே சொல்லாத போது நான் பேசுவது சரியாக இருக்காது... சத்யராஜ் விளக்கம்!

விஜயே சொல்லாத போது நான் பேசுவது சரியாக இருக்காது… சத்யராஜ் விளக்கம்!

-

- Advertisement -

விஜய் மாணவர்களுக்கு வழங்கிய அறிவுரை குறித்து சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய், 234 தொகுதிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த ஜூன் 17ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கான்வென்ஷன் சென்ட்ரலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தமிழகம் முழுவதும் உள்ளே 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார். மேலும் மாணவ மாணவியர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், கல்வி கற்பது தவிர சில நற்குணங்களையும் சிந்தனை திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.விஜய்

அது மட்டும் இல்லாமல் பாட புத்தகங்களை தாண்டி காமராஜர், அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட பல தலைவர்களை பற்றி படித்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

நம் கைகளைக் கொண்டு நம் கண்ணை குத்தும் செயல் இங்கு நடக்கிறது. அதனால் நாளைய வாக்காளர்களான மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோரிடம் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுமாறு வலியுறுத்தியுள்ளார். இது சம்பந்தமாக அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் பல திரை உலக பிரபலங்களும் விஜயை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் கோவையில் தனியார் அழகு நிலையம் ஒன்றை திறந்து வைத்த நடிகர் சத்யராஜிடம் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விகள் செய்தியாளர்களால் எழுப்பப்பட்டது.

அதற்கு சத்யராஜ் “மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் விஜய் செய்தது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை படிக்க வேண்டும் என்ற அறிவுரையை நான் வரவேற்கிறேன். இது போன்ற செயல்களால் விஜய் இளைய தலைமுறையினர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். மேலும் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவரே வெளிப்படையாக கூறாத போது நான் அதைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது” என்று பதிலளித்துள்ளார்.

MUST READ