spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாரம்பரிய தேசிய நெல் திருவிழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன்

பாரம்பரிய தேசிய நெல் திருவிழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன்

-

- Advertisement -
தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.  
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் அயலான். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. ரவிக்குமார் இப்படத்தை இயக்கி இருந்தார். அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. வரும் ஜூலை மாதத்திற்குள் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இத்திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். ருக்மணி படத்தில் நாயகியாக நடிக்கிறார். அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் இந்த திருவிழா நடத்தப்படுவது வழக்கமாகும். மேலும், திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ” உழவர்களின் தோழன் விருது” வழங்கப்பட்டது

MUST READ