- Advertisement -
வேட்டையன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி விமான நிலையம் சென்றடைந்தார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் சுமார் 600 கோடி ரூபாய் வசூலித்தது. ஜெயிலர் வெற்றிக்கு பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிகாந்தின் 170வது திரைப்படமாகும். அவரது 170-வது படமான இதில்,அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும், இப்படத்திற்கு வேட்டையன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடி்பபு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதியில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று முடிந்தது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றனர். அங்கு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. ரஜினி பிறந்தநாளையொட்டி, படத்திற்கு வேட்டையன் என தலைப்பு வைக்கப்பட்டு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.
Superstar Rajinikanth from Turicorin airport 💥🔥#SuperstarRajnikanth #Thalaivar#ThalaivarNirandharam #Rajinikanth#Vettaiyan #ThalaivarNirantharampic.twitter.com/5oCBclvBn0
— Kutty Chovan (@KuttyChovan) December 26, 2023