Homeசெய்திகள்சினிமாதிருமணத்தை ரகசியமாக வைக்க விரும்பவில்லை... திருமணம் குறித்து டாப்ஸி விளக்கம்.. திருமணத்தை ரகசியமாக வைக்க விரும்பவில்லை… திருமணம் குறித்து டாப்ஸி விளக்கம்..
- Advertisement -
தனது ரகசிய திருமணம் குறித்து நடிகை டாப்ஸி முதன் முதலாக விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. இவர் தற்போது இந்தியில் பிசியாக வலம் வந்தாலும், அவர் தமிழ் மொழியிலும் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர். தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகினார். இப்படத்தில், அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜீவாவுடன் வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன், வலை, ஆரம்பம், வை ராஜா வை, முனி 3, கேம் ஓவர், திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் அனபெல் சேதுபதி. விஜய் சேதுபதியுடன் சேர்ந்து அப்படத்தில் நடித்திருப்பார்.

தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, இந்தியிலும் அவர் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது இந்தியிலும் அவர் டாப் நடிகையாக வலம் வருகிறார். இறுதியாக ஷாருக்கான் நடித்த டன்கி படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருப்பார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பாக, நடிகை டாப்ஸி தனது காதலர் மதியாஸ் போ என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, அவர் திருமணமும் செய்து கொண்டார். திருமணத்தை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை. ஆனால், அவரது திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலான போதிலும் அவர் அதுகுறித்து விளக்கம் அளிக்காமல் இருந்தார்.

இந்நிலையில், நடிகை டாப்ஸி ரகசிய திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தனது திருமணத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள ஒரு நாளும் விரும்பவில்லை என்றும், திருமணத்தை வெளிப்படையாக அறிவித்தால் பல கருத்துகள் எழும் என்றும், இதற்கு மனதளவில் தயாராக இல்லை என்றும் கூறியிருக்கிறார்.