Homeசெய்திகள்சினிமாஉமாபதி ராமையா மற்றும் ஐஸ்வர்யா அர்ஜூனின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

உமாபதி ராமையா மற்றும் ஐஸ்வர்யா அர்ஜூனின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

-

கோலிவுட்டில் ஆக்‌ஷன் கிங் என்றால் அது ஒருவர் தான், அது அர்ஜூன் சார்ஜா. 80-களில் தொடங்கி இன்று வரை ஆக்‌ஷன் கிங்காகவே திரையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். முதல்வன், தாய் மேல் ஆணை, அடிமை சங்கில், மேட்டுப்பட்டி மிராசு, எங்க ஊரு தம்பி, நான்தான் ராஜா என பல படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. ஜெய்ஹிந் திரைப்படம் அவரது திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இறுதியாக லியோ படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன், அடுத்து அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். இதைத்தொடர்ந்து அவர் சினிமாவில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே, நடிகை ஐஸ்வர்யாவும், பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்தனர். பெற்றோர்கள் சம்மதத்துடன் இரு வீட்டார் முன்னிலையில் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும், உமாபதி ராமையாவுக்கும் சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இருவரின் திருமண புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவர்களுக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ