Homeசெய்திகள்சினிமாமெர்சலுக்கு பிறகு விஜய்யின் கோட் பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

மெர்சலுக்கு பிறகு விஜய்யின் கோட் பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

-

மெர்சல் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் தி கோட் திரைப்படத்தின் சாட்லைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கோட் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன், அஜ்மல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும் இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் முதல் தோற்றம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திரையரங்குகளில் வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்திலிருந்து முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தி கோட் திரைப்படத்தின் சாட்லைட் உரிமையை, பிரபல ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பாக விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் உரிமையை ஜீதமிழ் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

MUST READ