spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜோஸ்வா இமைபோல் காக்க... பிப்ரவரியில் வெளியிட திட்டம்...

ஜோஸ்வா இமைபோல் காக்க… பிப்ரவரியில் வெளியிட திட்டம்…

-

- Advertisement -
தமிழ் சினிமா இயக்குனர்களில் கௌதம் மேனன் ஒரு ஸ்டைலிஸ் இயக்குனர். கலர்ஃபுல் காதலாக இருந்தாலும் சரி, காக்கி கசங்கும் ஆக்சனாக இருந்தாலும் சரி, தன் படத்தை கிளாஸாக காட்டுவதில் கௌதம் வாசுதேவ் மேனன் கில்லாடி. மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கௌதம் மேனன், முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். இரண்டாவது படத்தில் சூர்யாவுக்கு காக்கி மாட்டி அதிரடி காட்டினார். தாறுமாறு ஹிட் அடித்த காக்க காக்க திரைப்படத்தில், தோட்டாக்கள் பாயும் அதே வேகத்தில் காதலைையும் பாய்ச்சி கரை புரள செய்தார் கவுதம்.

காதலை பல பரிமாணங்களில் சொன்ன கவுதமுக்கு, விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஒரு பென்ச்மார்க். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனனின் திரைவாழ்வில் அனைத்தும் ஏறுமுகம் தான். இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. சிம்புவை வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜோஸ்வா இமை பால் காக்க. இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி அதே ஆண்டு படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ஆனால், ஒரு சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது.

இப்படத்திற்கு பின்னர் கௌதம் மேனன் எடுத்த என்னை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை எல்லாம் வௌியிட்டார். ஆனால், இத்திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ள இப்படத்தில் வருண் நாயகனாக நடித்திருப்பார். கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். இந்நிலையில் இத்திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

MUST READ