Homeசெய்திகள்சினிமாஅவருடன் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.... நடிகை திரிஷா பேச்சு!

அவருடன் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை…. நடிகை திரிஷா பேச்சு!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா.அவருடன் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.... நடிகை திரிஷா பேச்சு!இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்று வேண்டும் விஜய், அஜித் சூர்யா ஆகிய முன்னணி நடிகர்களுடன் மீண்டும் நடித்து பெயர் பெற்று வருகிறார். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். அவருடன் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.... நடிகை திரிஷா பேச்சு!அடுத்தது சூர்யா 45 படத்தை கைவசம் வைத்துள்ளார். இது தவிர மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா. அதே சமயம் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் வருகின்ற ஜூன் 5 அன்று திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ட்ரைலரில் திரிஷாவின் கேரக்டர் அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது. ஏனென்றால் தக் லைஃப் படத்தில் திரிஷா, சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமலுக்கு கள்ளக்காதலியாக நடித்திருக்கிறார். அவருடன் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.... நடிகை திரிஷா பேச்சு!இந்நிலையில் நடிகை திரிஷா பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம், எந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆசை? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு திரிஷா, “சந்தேகமே வேண்டாம். அது பகத் பாஸில் தான். அவர் எந்த மாதிரியான கதைகள் நடித்தாலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவார். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ