கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி தனது 170 ஆவது படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான டிஜே ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோரின் நடிப்பில் மல்டி ஸ்டாரர் படமாக இப்படம் உருவாகி வருகிறது. அதன்படி நடிகர் பகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா ரஜினிக்கு வில்லனாகவும் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்னும் ஒரு மாத காலத்தில் வேட்டையன் படத்தின் முழு படப்பிடிப்புகளும் முடிவடைந்து விடும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அதுமட்டுமில்லாமல் வேட்டையன் படத்தை 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் ரிலீஸ் 2024 செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்க வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே 2024 தீபாவளியை குறி வைத்து ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுகிறது. ஜெயிலர் படத்தைப் போல இமாலய வெற்றிக்கு ரஜினி தயாராகி வருகிறார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


