Homeசெய்திகள்தலையங்கம்"அதிகார ஆணவத்திற்கு கிடைத்த மரண அடி!" — சாதி, மதங்களைக் கடந்து ஒன்றிணைந்த இளைஞர்களின் வெற்றி!

“அதிகார ஆணவத்திற்கு கிடைத்த மரண அடி!” — சாதி, மதங்களைக் கடந்து ஒன்றிணைந்த இளைஞர்களின் வெற்றி!

-

- Advertisement -

மக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு அரசும் சுக்குநூறாக உடைந்துபோகும் என்பதற்கு மற்றுமொரு சாட்சியாகத் தற்போதைய அரசியல் களம் மாறியுள்ளது. காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அமைப்பின் தலைமையில் நாட்டின் இளைஞர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டங்களின் விளைவாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது வெறும் வினாத்தாள் கசிவு ஊழலுக்கான ராஜினாமா மட்டுமல்ல; மாறாக, இந்திய ஜனநாயகத்தில் ஆளும் பாஜக அரசின் அதிகார ஆதிக்க முறைக்குக் கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மரண அடியாகும். இந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் வழக்கமான எதிர்க்கட்சிகளுக்குச் சுத்தமாக இடமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது."அதிகார ஆணவத்திற்கு கிடைத்த மரண அடி!" — சாதி, மதங்களைக் கடந்து ஒன்றிணைந்த இளைஞர்களின் வெற்றி!

இளைஞர்களின் எழுச்சியும் தேர்வு முறைக் கேடுகளும்!
அதிகரித்து வரும் மக்கள் தொகையுடன் கூடிய நம் நாட்டில், படித்து முடித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. அமைப்புச் சாரா தொழிலாளர்கள் கடுமையாக நசுக்கப்பட்டு வரும் நிலையில், இளைஞர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நுழைவுத் தேர்வுகள் முறைகேடுகளின் கூடாரமாக மாற்றப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக நடைபெற்ற வினாத்தாள் கசிவுகள் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகளைச் சிதைத்தன.

we-r-hiring

பள்ளித் தேர்வுகளுடன் சேர்த்து, லட்சக்கணக்கில் செலவழித்து கோச்சிங் வகுப்புகளில் படித்து கடுமையான தேர்வுகளை எழுதிய சுமார் 20 லட்சம் மாணவர்கள், மீண்டும் தேர்வை எழுதக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்தத் துயரமான சூழலில் பல மாணவர்கள் மன உளைச்சலால் உயிரிழந்தது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.

மதங்களைக் கடந்த இளைஞர்களின் ஒருமைப்பாடு!
கடந்த சில ஆண்டுகளாகச் சாதி, மதம் என்ற குறுகிய அடையாளங்களுக்குள் முடக்கப்பட்டிருந்த இளைஞர்களை, இந்தத் தேர்வு மோசடி அந்தச் குறுகிய வட்டங்களைக் கடந்து ஒன்றாக இணைத்துள்ளது. ஆளுங்கட்சியின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள பிரதான தொலைக்காட்சி ஊடகங்களைத் தவிர்த்து, எளிய முகவரியற்ற இந்தப் போராட்டக்காரர்கள் சமூக ஊடகங்கள் மூலமாகச் சில நாட்களிலேயே கோடிக்கணக்கானோரின் ஆதரவைத் திரட்டினர்."அதிகார ஆணவத்திற்கு கிடைத்த மரண அடி!" — சாதி, மதங்களைக் கடந்து ஒன்றிணைந்த இளைஞர்களின் வெற்றி!

டெல்லி காவல்துறையின் அடாவடித்தனமும், போராட்டக் களங்களைச் சுற்றியுள்ள இணையதளச் சேவைகளை முடக்கும் முயற்சிகளும் போராடுபவர்களின் கோபத்தையும் எண்ணிக்கையையும் மேலும் அதிகரித்தன. கடந்த 12 ஆண்டுகளில் நசுக்கப்பட்ட அல்லது திசைதிருப்பப்பட்ட ஏனைய போராட்டங்களைப் போல இந்த இயக்கத்தை எளிதில் ஒடுக்க முடியாது என்பதை அரசு இறுதியாக உணர்ந்துகொண்டது. CJP அமைப்பினரின் நியாயமான உறுதியின் முன்னால், தர்மேந்திர பிரதானின் பதவிக்காலம் நீடிக்க முடியாததாக மாறியது.

அரசின் மூர்க்கத்தனமான அடக்குமுறையும் தந்திரமான பின்வாங்குதலும்!
அமைச்சரின் பதவி விலகல் அறிவிப்பு எந்தவொரு உண்மையான தார்மீகப் பொறுப்பேற்பையும் வெளிப்படுத்தவில்லை. தேர்வுகளை நடத்துவதில் ஏற்பட்ட தோல்விகளுக்கு வருந்துவதற்குப் பதிலாக, போராட்டங்களால் உருவாக்கப்பட்ட சூழலை “தேசவிரோத” சக்திகள் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்காகவே தான் விலகுவதாக அவர் புத்திசாலித்தனமாக நியாயப்படுத்த முயன்றுள்ளார். மாணவர்களில் சிலர் உள்நோக்கத்துடன் மத்திய அரசுக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்ற அரசின் குறுகிய மனநிலையே அவரது கடிதத்தில் பிரதிபலிக்கிறது."அதிகார ஆணவத்திற்கு கிடைத்த மரண அடி!" — சாதி, மதங்களைக் கடந்து ஒன்றிணைந்த இளைஞர்களின் வெற்றி!

போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்களைத் தடிகளால், ரப்பர் குண்டுகள் மற்றும் ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகளைக் கொண்டு டெல்லி காவல்துறை எதிர்கொண்டது இந்த மனநிலையின் வெளிப்பாடுதான். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் அனைத்து நாகரிக நெறிமுறைகளையும் மீறிய ஒரு மிருகத்தனமான செயலாகும் இது. போராட்டங்களை மத ரீதியானவை என்றும், வெளிநாட்டு முகமைகளால் ஈர்க்கப்பட்டவை என்றும் சித்தரிக்கும் முயற்சிகள் படுதோல்வி அடைந்த பின்னர்தான் இந்த ராஜினாமா வந்துள்ளது. எனவே, இது அரசின் தவறுகளை உணர்ந்ததற்கான வெளிப்பாடு அல்ல, மாறாக தவிர்க்க முடியாத ஒரு தந்திரமான பின்வாங்குதலே ஆகும்.

இந்திய ஜனநாயகத்தின் திருப்புமுனை!
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, கடந்த காலங்களில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறாமல் கிடைத்த வெற்றிகளை கொண்டு  மக்களின் ஆதரவு பெற்றதாக மாற்றி வந்துள்ளது. மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவம் போன்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை ஒருமித்த கருத்தை உடைக்க இது பயன்படுத்தப்பட்டது. வடக்கு, மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வகுப்புவாத அடிப்படையில் பிரிவினையைத் தீவிரமாக்குவதன் மூலம் தனது ஆதரவுத் தளத்தை அது உயர்த்திக்கொண்டது.

பாஜக எதிர்ப்புகளைத் தேசவிரோதச் செயலாக மாற்றுவதும், அமலாக்க துறையை வைத்து  தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்வதும், குடி உரிமைகளை பறித்து அறிவிக்கப்படாத அவசரநிலைக்கு வழிவகுத்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்களின் கொள்கையை நோக்கி நாட்டை மீட்டெடுக்க மீண்டும் ஒரு மக்கள் எழுச்சி தேவைப்பட்டுள்ளது."அதிகார ஆணவத்திற்கு கிடைத்த மரண அடி!" — சாதி, மதங்களைக் கடந்து ஒன்றிணைந்த இளைஞர்களின் வெற்றி!

மாற்றத்தை நோக்கிய இந்தியா!
CJP அமைப்பினரும், அவர்களுடன் உறுதுணையாக நின்ற சமூக ஆர்வலர்களும் (சோனம் வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது உள்ளிட்டவை) – தங்களின் நியாயமான கோரிக்கையைச் சத்தியாகிரக முறையில் நிலைநிறுத்தி, அரசின் அடக்குமுறையைத் தாண்டி வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

நிர்வாகத்தைக் கண்காணிக்கக் நியமிக்கப்பட்ட அரசு நிறுவனங்களுக்கும், அதிகாரத்தைக் கேள்வி கேட்கக் கடமைப்பட்ட ஊடகங்களுக்கும் இதுவொரு கடுமையான எச்சரிக்கையாகும். அடக்குமுறைக்கு அடிபணியாமல், சமூகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பொறுப்பை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். புதிய அமைச்சரின் கீழ் நுழைவுத் தேர்வு முறையை அரசு சீரமைக்கத் தொடங்கும் போது, அவர்கள் இந்தச் சோதனையில் வெற்றி பெறுவார்களா என்பது தெரியவரும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி: இந்தியா மாற்றத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் தீவிரமாக ஏங்குகிறது.

காவிரி நீர் உரிமை: மேகதாட்டு அணை கட்ட ஒன்றிய அரசு மறைமுக அனுமதி அளிக்க முயல்கிறது – வைகோ கடும் கண்டனம்!

MUST READ