
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 6ஆவது தங்கம்!
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதைத் தடுக்கும் வகையில் டெல்லியில் உயர்மட்ட அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்பாக, கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்; காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் இறப்புகளைத் தடுக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஆண்டிஜன் சோதனை கருவிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கொள்முதல் செய்து டெங்கு கொசு உற்பத்தியைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவில் உள்ள ஆடுகளங்களை ஆராய்ந்து வைத்துள்ளோம்”- பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டி!
மேலும், பூச்சியியல் நிபுணர்களைப் பணியமர்த்தி ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்,