spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் புதிதாக 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

-

- Advertisement -

இந்தியாவில் புதிதாக 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது மற்றும் 25,178 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உச்சம் அடையும் கொரோனா தொற்று

இததொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 439 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.

we-r-hiring

இந்தியாவில் தற்போது 25,178 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.06 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.76 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 3,861 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,44,14,599 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 1,839 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.49% வாராந்திர பாதிப்பு விகிதம் 2.17% இதுவரை மொத்தம் 92.77 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 73,760 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ