Homeசெய்திகள்விளையாட்டுஹர்திக் பாண்ட்யா அபார பந்துவீச்சு - இந்திய அணிக்கு 97 ரன்கள் இலக்கு!

ஹர்திக் பாண்ட்யா அபார பந்துவீச்சு – இந்திய அணிக்கு 97 ரன்கள் இலக்கு!

-

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் அயர்லாந்து அணியானது பால் ஸ்டிர்லிங் தலையிலும் களம் காண்கின்றன. இந்த ஆட்டமானது அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து அயர்லாந்து அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆந்தரே பால்பிரின் 5 ரன்களிலும் பால் ஸ்டிர்லிங் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லார்கண் டக்கர் 10 ரன்களிலும் ஹரி டெட்டர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சு தரப்பில் இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.

 

MUST READ