Homeசெய்திகள்விளையாட்டுஅயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

-

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். அதன் பிறகு ஜூன் 24ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் பைனலும் நடக்க உள்ளன. இப்போட்டிக்கான முதலாவது லீக் ஆட்டம் கடந்த 2-ந் தேதி தொடங்கியது.

இந்நிலையில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் அயர்லாந்து அணியானது பால் ஸ்டிர்லிங் தலையிலும் களம் காண்கின்றன. இந்த ஆட்டமானது அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் மோதும் இந்திய அணியானது வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து அயர்லாந்து அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளனர்.

MUST READ