17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் சிஎஸ்கேVSஆர்சிபி அணிகள் மோதும் முதலாவது போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்நிலையில் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ,சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இப்போட்டியில் ருத்ராஞ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முதலாவது போட்டியில் மோதுகின்றன. இதுவரை நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. . இதில் சிஎஸ்கே அணி 20 முறையும் , பெங்களூர் அணி 10 முறை வென்றுள்ளது. `1 போட்டியானது முடிவில்லாமல் போனது.
இந்நிலையில் இன்று மாலை 17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதனைத்தொடர்ந்து ஆட்டத்திற்கான நாணய சுண்டலில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டூ பிளிஸ்சிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து விராட் கோலியும் பாப் டூ பிளிஸ்சிஸ்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தற்போது வரை ஆர்சிபி அணியானது 7.2 ஓவர்களில் 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.