
3வது ஐபிஎல் லீக்கில் ஐதரபாத் அணிக்கு எதிரான போட்டியில், ரஸ்செல்லின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி 208 ரன்கள் குவித்தது.
17வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதலாவது லீக் ஆட்டத்தில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளஸ்சிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலாவதாக பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியானது 20 ஓவர் முடிவில் 208 ரன்கள் குவித்தது. அணியின் அதிகபட்சமாக ஆந்தரே ரஸ்செல் 64 ரன்கள் குவித்தார்.