spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபாரம்!

பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபாரம்!

-

- Advertisement -

 

பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபாரம்!
Photo: IPL

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 66வது லீக் போட்டி, நேற்று (மே 19) இரவு 07.30 மணிக்கு தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது.

we-r-hiring

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்பு!

முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக சாம் கரண் 49 ரன்களையும், ஜிதேஷ் சர்மா 44 ரன்களையும், ஷாரூக் கான் 41 ரன்களையும் எடுத்துள்ளனர்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.4 ஓவர்களிலே 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி வீரர்கள் தேவ்தத் படிக்கல் 51 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்களையும், ஹெட்மேயர் 46 ரன்களையும் எடுத்துள்ளனர்.

செப். 30-ம் தேதி வரை மட்டுமே ரூ.2000 நோட்டுகள் செல்லும்

வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ