Homeசெய்திகள்விளையாட்டுபிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணி எது? - பெங்களூருVSசென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணி எது? – பெங்களூருVSசென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை

-

 

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 68வது லீக் போட்டியில் பெங்களூருvsசென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 67 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 68வது லீக் போட்டி நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 68வது லீக் போட்டியில் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 6 வெற்றி 7 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலுள்ளது. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 7 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில 4வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு அணி 10 முறையும் சென்னை அணி 21 முறையும் வெற்றி பெற்றுள்ளன.. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. இப்போட்டியில் தோற்கும் அணியானது பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறும் என்பதால் இரு அணிகளுக்கும் போட்டியானது வாழ்வா – சாவா ஆட்டம் போன்றது.

MUST READ