கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், இன்று நடைபெறவுள்ள 10வது லீக் போட்டியில் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயர்ஸ் ஐய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இன்று 7.30 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. பெங்களூரு அணியானது தனது தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அடுத்ததாவது நடைபெற்ற இரண்டாவது போட்டியில், பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணியானது 18 முறையும், பெங்களூரு அணியானது 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயர்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பெங்களூர் அணி முதலாவது பேட்டிங் விளையடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி 83 ரன்னிலும் பாப் டூ பிளசிஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 33 ரன்னிலும், மேக்ஸ்வெல் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக விராட் கோலி 83 ரன்கள் குவித்தார். இறுதியில் பெங்களூர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.