Homeசெய்திகள்விளையாட்டுஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

-

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதலாவது தகுதி சுற்று கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் கடந்த 22ம் தேதி எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூருvsராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான்VSஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 1 முறையும் ராஜஸ்தான் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஏற்கனவே 2வது முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ராஜஸ்தான் அணி இப்போட்டியிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். அதே சமயம் ஐதராபாத் அணியும் 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்ல முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட்டும் அபிஷேக் ஷர்மாவும் களமிறங்கவுள்ளனர்.

MUST READ