Homeசெய்திகள்விளையாட்டுராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் வெற்றியை ருசித்த குஜராத் அணி!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் வெற்றியை ருசித்த குஜராத் அணி!

-

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 24வது லீக் போட்டி நடைபெற்றது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 24வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் விளையாடி நான்கையும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடைசியாக ராஜஸ்தான் அணி பெங்களூர் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் குஜராத் அணியை பொறுத்தவரையில், இதுவரை மொத்தம் 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 5 போட்டிகளில் இரண்டில் வெற்றியும், மூன்றில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரை கடைசியாக பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடதக்கது. கடந்த போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணியானது இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர் 8 ரன்னிலும் யாஷ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 68 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருக்க, அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 196 ரன்கள் குவித்தது.

பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் 35 ரன்னிலும் சுப்மான் கில் 72 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மேத்யூ வேட் 4 ரன்னிலும் அபினவ் மனோகர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர், இறுதியில் அதிரடி விளையாடிய ராகுல் திவேதியா  11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆக, ரஷித் கான் 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இறுதி ஓவரில் அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட போது ரஷித் கான் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு வித்திட்டார். அணியின் ஆட்டநாயகன் விருது ரஷித் கானுக்கு வழங்கப்பட்டது.

 

MUST READ