Homeசெய்திகள்தமிழ்நாடுஒடிசா ரயில் விபத்து- புதுச்சேரி அரசு உதவி எண்கள் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்து- புதுச்சேரி அரசு உதவி எண்கள் அறிவிப்பு

-

ஒடிசா ரயில் விபத்து- புதுச்சேரி அரசு உதவி எண்கள் அறிவிப்பு

ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் கோர விபத்தினால் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும்,900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வருகின்ற செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கின்றேன்.

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் எவை எவை?
Photo: ANI

மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் , புதுச்சேரியைச் சார்ந்தவர்கள் யாரேனும் இந்த விபத்தில் சிக்கி இருப்பதாகத் தெரிந்தால், அவர்களை உடனடியாக மீட்கவும் அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை மேற்கொள்ள உதவும் வகையில், புதுச்சேரி மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம், திறக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் : 1070, 1077, 112 மற்றும் தொலைபேசி எண்கள்: 0413-2251003, 2255996 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். இந்த அவசரகால மையம் 24 மணிநேரமும் இயங்கும். மேலும் இதுவரை புதுச்சேரியை சேர்ந்தவர்கள் இறந்ததாகவோ, படுகாயமடைந்த்தாகவோ தகவல் இல்லை” என்றார்.

MUST READ