spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக மீனவர்கள் 22 பேருக்கு ஆக. 20 வரை சிறை!

தமிழக மீனவர்கள் 22 பேருக்கு ஆக. 20 வரை சிறை!

-

- Advertisement -

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்களுக்கு வரும் 20ம் தேதி வரை சிறை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் அவர்களது 2 விசைப்படகுகளை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர். தொடர்ந்து மீனவர்களை இலங்கைபு த்தளம் மாவட்டம் கல்பிட்டி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

we-r-hiring

ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் இன்று மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக மீனவர்களை வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மீனவர்கள் 22 பேரும் வாரியபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

MUST READ