spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசீமான் புகைப்பட சர்ச்சை: படம் போலி என்பதற்கான ஆதாங்களை வெளியிட தயார்... இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்...

சீமான் புகைப்பட சர்ச்சை: படம் போலி என்பதற்கான ஆதாங்களை வெளியிட தயார்… இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அதிரடி!

-

- Advertisement -

சீமான் புகைப்பட விவகாரத்தில் தன்னை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் விளக்கம் அளித்துள்ளார். புகைப்படம் போலியானது என்பதற்கான ஆதாரங்கனை சீமானிடம் நேரில் காட்டவும் தயார் என்றும் அறிவித்துள்ளார்.

we-r-hiring

சீமான் – பிரபாகரன் இணைந்த புகைப்படம் தொடர்பாக தன் மீது நாம் தமிழர் கட்சியினரால் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளித்து இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-  திரைத்துறையில் நிறைய பெரியாரியவாதிகள் உள்ளனர். ஆனால் திரைத்துறை பிரமுகராக வெளியில் வந்து பேசியவர்கள் எம்.ஆர்.ராதா, மணிவண்ணன் போன்ற வெகு சிலர்தான் இருந்தனர். ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றால், சென்னையை சேர்ந்த ஒரு திரைத்துறை பிரபலம் வருகிறார் என்றால் அவர் கருத்தைக்கேட்க அதிகளவில் கூட்டம் கூடியது. பெரியாரிய கருத்தியலை எளிய மக்களிடம் சென்று சேர்க்க அவரின் தேவை ஏற்பட்டது. அதுபோல எம்.ஆர்.ராதா, சத்யராஜ், இயக்குநர் மணிவண்ணன் போன்றவர்கள் இருந்தனர். அதேபோல் நமது சக தோழரான சீமான் இருப்பார் என்ற நம்பிக்கையில் அப்படி செய்தோம். பின்னாளில் அவர்கள் மாறும்போது தான் நாம் செய்தது தவறு என தெரியவந்தது.

நாம் தமிழர் கட்சியினர் இரண்டு புகைப்படங்களும் என்னிடம் இருக்கும் அல்லவா, அதனை மீண்டும் இணைத்து காண்பியுங்கள் என்று சொல்கின்றனர். இந்த புகைப்படம் ஃபேக், புகைப்படத்தின் ஆர்ஜின், டேட் எடுத்துவிட்டேன் என்கின்றனர். அதற்கு விளக்கம் அளிக்க உள்ளேன். மென்பொருளில் அன்று எடுத்த புகைப்படத்தையும் இன்று எடுத்த புகைப்படத்தையும் மெர்ஜ் செய்தால், மென்பொருள் கண்டுபிடித்து விடும். நெகடிவில் எடுத்த போட்டோவை, டிஜிட்டல் போட்ட உடன் மெர்ஜ் செய்தால் இரண்டுக்குமான பிக்சல் ரேட் மாறுபடும். அன்று எடுத்த புகைப்படத்தை அன்று எடுத்த மற்றொரு புகைப்படத்தையும் மெர்ஜ் செய்தால், எந்த மென்பொருளாளும் கண்டுபிடிக்க முடியாது. அப்படி ஓரளவுக்கு மேட்ச் ஆன புகைப்படம் தான் அந்த படம். இதில் கண்டுபிடிக்க முடியும் என்பதற்காக எல்லாம் பொய்யாகிவிட முடியாது. அதற்கான விளக்கமும் விஷுவலாக வழங்க உள்ளேன். பிரச்சினை வரும்போதே இப்படி பேசுவார்கள் என தெரியும். எனவே நான் விளக்கம் அளிக்க உள்ளேன்.

சீமான் போலி புகைப்படம் விவகாரத்தில் என்னிடம் ஒரிஜினல் பைல் இல்லை. டிவிடியில் போட்டு எடுத்துவந்தனர். அதையும் கவனமுடன் அந்த டிவிடியை வாங்கிச் சென்றனர். கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் எனது சொந்த புகைப்படங்கள் பலவையும் காணாமல் போய்விட்டது. அப்படி காப்பாற்றியே வைக்க வேண்டும் என்றால் 10 டிவிடி போட்டு வைத்திருப்பேன். அதை அந்த அளவிற்கு முக்கியத்துவமாக கருதவில்லை. எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை செங்கோட்டையனிடம் வழங்கினேன். அந்த புகைப்படத்தை நான்தான் வாங்கினேன் என்று திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ்காந்தி தெரிவித்துள்ளார். அது குறித்து எனக்கு தெரியவில்லை. போட்டோ போலியானது என்பதால் சீமான் பேசக்கூடாது என்று சொல்லவில்லை. நான் செய்ததை இப்போது சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது சொன்னேன். அதை வந்து மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். அவர் விஷயங்களில் பலவற்றில் பொய் உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

சீமான் புகைப்படம் விவகாரம் வெளியான பின்னர் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரப்புகின்றனர். ராஜ்குமார் பெரியார் படத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார். கொளத்தூர் மணியுடன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். சுப.வீரபாண்டியன் அவரது படத்திற்கு வேலை செய்கிறார் என பல்வேறு தகவல்களை பகிர்கின்றனர். ஏதோ தொல்லியல் துறையில் நிலத்தை தோண்டி ஆதாரங்களை சேகரித்தது போல அவர்கள் சொல்கின்றனர். இவற்றை எல்லாம் எனது முகநூல் பக்கத்திலேயே பதிவு செய்துள்ளேன். நான் சமுநீதிக்கு ஆதரவாக, பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக பேசுகிற எல்லோருடம் பேசிக் கொண்டே இருக்கிறேன். இன்னும் பேசுவேன். அற்கான தயக்கமோ, வருத்தமோ கிடையாது. அதுதான் ஆதாரம் என்று காட்டினால் மகிழ்ச்சிதான். கொளத்தூர் மணி, சுப.வீ போன்றோர் இந்த செய்தி வெளியான பிறகுதான் என்னை அழைத்து பேசினர்.

 

போலி புகைப்பட சர்ச்சை தொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் சொல்ல தயாரா என சீமான் சொல்கிறார். இதனை பொதுவெளியிலேயே சொல்லிவிட்டேன். சீமானிடம் சொல்ல எனக்கு தயக்கம் இல்லை. அவர் எத்தனையோ விஷயங்களை இப்படி கேட்டு கொண்டே இருப்பார். பெரியார் சம்பந்தமாக விவாதம் பண்ணுங்கள் என்றால் வர மாட்டார். ஏதாவது ஓரு பொய்யை போகிற போக்கில் சொல்லிவிட்டு சொல்வார். அது குறித்து விவாதியுங்கள் என்றால் வரமாட்டார். நான் பொதுவெளியில் சொல்லி விட்டேன். அதற்கான ஆதாரங்களையும் காண்பித்துவிட்டேன். இப்போது இந்த புகைப்படம் போலி என சொல்பவர்களுக்கு ஆதாரம் வழங்க உள்ளேன். அவரே கேட்டாலும் இப்படி தான் எடிட் செய்தேன். இதை பேக் என்று சொன்னாலும் மென்பொருள் இப்படித்தான் அனலைஸ் செய்யும். இந்த புகைப்படம் ஒரிஜினல் என சொல்வதற்கான காரணங்கள் இவைதான் என சொல்வேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்

MUST READ